ஒரு காலத்தில் பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் தமக்குள் யார்
உயர்ந்தவர் என்ற சர்ச்சை உண்டாயிற்று. இதனால் இருவரும்
சிவபெருமானை மத்யஸ்திற்கு அழைத்தார்கள். ஆகையால்
சிவபெருமான் இவர்களின் உயர்வு தாழ்வு எண்ணத்தை
போக்க ஒரு போட்டி வைத்தார். யார் முதலில் தன்னுடைய அடியையோ
அல்லது முடியையோ பார்த்து சொன்னால் அவர் தான் சிறந்தவர் என்றார்.
பிறகு சிவன் ஜோதிமயமாக தன் உருவை மாற்றிக் கொண்டார். இதனால்
விஷ்னு வராக அவாதாரம் எடுத்து அடியை காண பூமியை குடைந்து
சென்றார். ஆனால் அவரால் முடியவில்லை.தான் செய்தது தவறு என்று
ஏற்றுக் கொண்டார். அதுபோல பிரம்மா அன்னப்பறவையாக மாறி
முடியை தேடிச் சென்றார். இடையில் தாழம்பூ சிவனின்
முடியிலிருந்து கீழே விழுவதை பார்த்துவிட்டு, சிவனின் முடியைக்
காண இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு தாழம்பூ தாம் பல்லாயிரம் வருஷ காலமாக கீழே விழுவதால்
தனக்கு தெரியவில்லை என்றது. இதனால் பிரம்மா தாம் தோற்க்கக்கூடாது
என்ற எண்ணத்தினால் தாழம்பூவை தாம் சிவனின் முடியை பார்த்ததாக
பொய் சாட்சி கூற கூறினார். இதற்கு தாழம்பூவும் ஒத்துக்கொண்டது.
இதனால் கோவம் அடைந்த சிவபெருமான் பிரம்மாவிற்கு
பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ
பூஜைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது இதை என்றும் மறவாதிருக்க
உனக்குள் பூநாகம் குடியேறும் என்றும் சபித்தார். அப்படி ஜோதியாக
சிவன் நின்ற அந்த இடம் தான் திருவண்ணாமலை ஸ்தலம்.
உயர்ந்தவர் என்ற சர்ச்சை உண்டாயிற்று. இதனால் இருவரும்
சிவபெருமானை மத்யஸ்திற்கு அழைத்தார்கள். ஆகையால்
சிவபெருமான் இவர்களின் உயர்வு தாழ்வு எண்ணத்தை
போக்க ஒரு போட்டி வைத்தார். யார் முதலில் தன்னுடைய அடியையோ
அல்லது முடியையோ பார்த்து சொன்னால் அவர் தான் சிறந்தவர் என்றார்.
பிறகு சிவன் ஜோதிமயமாக தன் உருவை மாற்றிக் கொண்டார். இதனால்
விஷ்னு வராக அவாதாரம் எடுத்து அடியை காண பூமியை குடைந்து
சென்றார். ஆனால் அவரால் முடியவில்லை.தான் செய்தது தவறு என்று
ஏற்றுக் கொண்டார். அதுபோல பிரம்மா அன்னப்பறவையாக மாறி
முடியை தேடிச் சென்றார். இடையில் தாழம்பூ சிவனின்
முடியிலிருந்து கீழே விழுவதை பார்த்துவிட்டு, சிவனின் முடியைக்
காண இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு தாழம்பூ தாம் பல்லாயிரம் வருஷ காலமாக கீழே விழுவதால்
தனக்கு தெரியவில்லை என்றது. இதனால் பிரம்மா தாம் தோற்க்கக்கூடாது
என்ற எண்ணத்தினால் தாழம்பூவை தாம் சிவனின் முடியை பார்த்ததாக
பொய் சாட்சி கூற கூறினார். இதற்கு தாழம்பூவும் ஒத்துக்கொண்டது.
இதனால் கோவம் அடைந்த சிவபெருமான் பிரம்மாவிற்கு
பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ
பூஜைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது இதை என்றும் மறவாதிருக்க
உனக்குள் பூநாகம் குடியேறும் என்றும் சபித்தார். அப்படி ஜோதியாக
சிவன் நின்ற அந்த இடம் தான் திருவண்ணாமலை ஸ்தலம்.
இத்திருக்கோவிலில் ஆறு பிரகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பிராத்திலும்
பல சந்நிதிகள் இருக்கிறது. முதல் பிராகரத்தில் சுவாமி சந்நிதியுள்ளது.
மூன்றாவது சந்நிதியில் உண்ணாமலை அம்மன் சந்நிதி உள்ளது. மற்ற
பிராகரங்களில் வேணுகோபாலசுவாமி சந்நிதி, விநாயகர் சந்நிதி, முருகன்
சந்நிதி, கால பைரவர் சந்நிதி, நவகிரக சந்நிதி, வள்ளாள மகாராஜா
கோபுரம், கிளி கோபுரம், அருணகிரினாதர் மண்டபம், பாதாள லிங்கம்,
ஆயிரங்கால் மண்டபம், மற்றும் பல சந்நிதிகள் உள்ளது.
இக்கோவிலின் ஸ்தல விருட்சம் மகிழ மரம். இந்த மரம் மருத்துவ
குணங்களை கொண்டுள்ளது. குழந்தையில்லாதவர்கள் இந்த மரத்தில்
சிறிய தொட்டில்கள் செய்து கட்டி வேண்டிக்கொள்வார்கள். குழந்தை
பிறந்தவுடன் தொட்டில்களை நீக்கிவிட்டு சுவாமி தரிசனம்
செய்துவிட்டு விட்டு செல்வார்கள்.
No comments:
Post a Comment