இவள் காந்தார தேசத்து அரசர் சுலபனின் புதல்வி.
தீவிர சிவபக்தை ஆவாள். இவளுக்கு சகுனி என்றொரு
சகோதரன் இருந்தான். பீஷ்மரின் அறிவுறுத்தலால்
திருதராஷ்டிரரை திருமணம் செய்துகொண்டாள். ஒரு சமயம்
திருதராஷ்டிரர் தான் பார்வையற்றவர் என்றுகூறி மனம்
வருந்தினார். தன் கணவர் காணமுடியாத உலகை தானும்
இனி காணபோவதில்லை என்று முடிவெடுத்தாள்.
தன் வாழ்நாள் முழுவதையும் கண்களை கட்டிக்கொண்டு
வாழ்ந்தாள். பதிவிரதையின் அறத்திற்கேற்ப வாழ்ந்தாள்.
வியாசரின் வரத்தால் 101 குழந்தைகளை பெற்றாள்.
(பார்வை இருந்தும் கணவரின் நிலைகருதி பயன்படுத்தாமல்
இருந்தது அசாதாரண விஷயம். எனவே பதிவிரதைக்கு சிறந்த
எடுத்துக்காட்டாய் காந்தாரி திகழ்கிறாள் )
No comments:
Post a Comment