Friday, 31 January 2014

மெய்பொருள் நாயனார்

       திருக்கோவிலூர் என்னும் ஊரில் கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மெய்பொருள் நாயனார். இம் மன்னர் சிவனடியார்களiன் திருவேடத்தையே மெய்ப்பொருள் என்று எண்ணியதால் மெய்பொருள் நாயனார் என்னும் பெயர் பெற்றார். இவர் மக்களுக்காக நன்னெறியில் வாழ்ந்துகாட்டியவர். இவரது செல்வம் முழுவதும் கோயில் திருப்பணிகளுக்கு பயன்பட்டு வந்தது.இவரது பகை அரசனான முத்தநாதன் இவருடன் பலமுறை போரிட்டு புறமுதுகு காட்டி ஓடியவர். எனவே இவரைச் சூழ்ச்சியால் வெல்ல திfட்டமிட்டார். ஒருநாள் சிவ வேடம் அணிந்து சில ஓலைச்சுவடுகளை கையில் எடுத்துக்கொண்டார். ஓலைச்சுவடுகளiன் நடுவில் கத்தியையும் மறைத்து வைத்துக்கொண்டு மெய்ப்பொருள் நாயனாரை சந்த்iக்க சென்றார். வழியில் காவலன் தத்தன் தடுத்தும் கேளாமல் மன்னரை பார்க்க அவரது அறைக்குள் சென்றார். அங்கு சிவனடியாரைக் கண்ட மன்னர் உடனே அவரை வணங்கி வந்த விஷயம் என்ன என்று கேட்டார். அதற்கு முத்தநாதன் சிவபெருமான் பண்டைக்காலத்தில் அருளiய ஆகமநூல் ஒன்று என்னிடம் உள்ளது. அதை உனக்கு எடுத்துக்கூறி உனக்கு மோட்சபதவி அளiக்க வந்தேன் என்று கூறினார்.இவரது வார்த்தையை உண்மை என்று நம்பிய அரசர் இதைவிடச் சிறந்த பேறு வேறு எதுவும் இல்லை. 


நீங்கள் ஆகமநூலை வாசித்து  எனக்கு அருள்செய்யுங்கள் என்று கூறினார். முத்தநாதன் சிறிது நேரம் யோசிப்பது போல் மன்னரையும் அரசியையும் மாறி மாறி பார்த்தார். உடனே மன்னர் நீங்கள் ஏதோ கூற தயங்குகிறீர்கள். அது என்ன? என்று கேட்க, முத்தநாதனும் ஆகம நூலை உரைக்கும்போது அரசியார் அருகில் இருக்கக்கூடாது என்று கூறியவுடன் அரசியார் அந்தப்புரம் சென்றுவிட்டார்.முத்தநாதன் திருநீறை தானும் பூசிக்கொண்டு மன்னருக்கும் கொடுத்தார். மன்னரும் திருநீற்றை இட்டுக்கொண்டு நூலை அருளும்படி முத்தநாதனை வணங்கினார். அப்போது முத்தநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மன்னரை குத்தினார். அந்நிலையிலும் மன்னர் முத்தநாதன் மீது கோபப்படவில்லை. இதை மறைந்திருந்து பார்த்த மெய்காப்பாளன் தத்தன் நொடிப்பொழுதில் உள்ளே வந்து முத்தநாதனை கொல்ல தன் உடைவாளை உருவினான். உடனே மன்னர், தத்தா, இவர் நம்மவர், இவருக்கு எந்தவிர கெடுதலும் ஏற்படாமல் நம் எல்லை வரை கொண்டு போய் விட்டுவிட்டுவா என்று கூறினார்.மன்னருக்கு ஏற்பட்ட துன்பம் நகரெங்கும் பரவியது. மக்கள் முத்தநாதனின் செயலைகண்டு வெகுண்டனர். தத்தன் மன்னரின் ஆணையைக் கூறினார். தத்தன் முத்தனாதன் எல்லையை கடந்ததும் மன்னரிடம் மீண்டும் ஓடிவந்து, மன்னா தங்கள் ஆனைப்படி அவருக்கு எந்த தீங்கும் இன்றி எல்லையை கடந்து அனுப்பிவைத்தேன் என்று கூறினார். தத்தன் வரும்வரை காத்திருந்த உயிர் தத்தன் கூறிய செய்தியைக் கேட்டதும் இன்றைக்கு என் ஐயன் செய்தது யாரே செய்யவல்லார் என்று கூறியவாறே பிரிந்தது. அப்பொழுது சிவன் சக்தி சமேதராய் எழுந்தருளi மெய்பொருளாரை உயிர்ப்பித்தார். இதைக்கண்ட அரசியார், தத்தன், மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர்.மெய்ப்பொருளாருக்கும் அவரது மனைவியாருக்கும் தம்மோடு வாழும் பேற்றினை சிவன் அளiத்தார். உயிர் போகும் சமயத்திலும் சிவனடியார்களiடமும், திருநீறு அணிந்தவர்களiடமும் பக்தி உடையவர்களாய் இருங்கள் என்று வாழந்து காட்டியவர். மெய்ப்பொருளார்.

Wednesday, 29 January 2014

வேதவதி - சீதை

                          வேதவதி என்பவள் மகாலட்சுமியின் அவதாரம்.
ஒருமுறை ராவணன் பூமியைச் சுற்றி வரும்போது இமயமலைக் காட்டுப் பகுதியில் தவம் புரியும் ஒரு மாபெரும் அழகியைப் பார்க்கிறான். காம வசப்பட்ட ராவணன் இளமை பொங்கி வழியும் அழகியிடம் தவத்தை விட்டு விட்டுத் தன்னை மணம் புரிய வேண்டுகிறான். அந்த அழகியோ, பிருஹஸ்பதியின் புத்திரரான பிரம்ம ரிஷி குஸத்வஜரின் புதல்வி தான் என்றும், வேதங்களின் பிறப்பாகத் தான் பிறந்ததாகவும், தன்னை அடையத் தக்கவர் விஷ்ணு ஒருவரே என்று தன் தந்தை கருதியதாகவும், இதைக் கேட்டுக் கோபம் கொண்ட தைத்ய அரசன் சம்பு இரவில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையைக் கொன்றதாகவும், இதனால் துக்கப்பட்டுத் தனது தாயார் அவருடன் சிதை ஏறியதாகவும், அதன் பின்னர் தந்தையின் ஆசையை நிறைவேற்ற நாராயணரை நோக்கித் தவம் புரிவதாகவும் கூறினாள்.

யார் அந்த விஷ்ணு? என்று ஏளனமாகக் கூறியவாறே வேதவதியின் கூந்தலைப் பிடித்து ராவணன் தூக்கவே வேதவதி தன் கையைத் தூக்கினாள். அது வாளாக மாற தன் கூந்தலை அறுத்துக் கொண்டு தீயை மூட்டி, நான் இனியும் உயிர் வாழ ஆசைப்படவில்லை; பெண்ணான என்னால் உன்னைக் கொல்ல முடியாது; நான் சாபமிட்டாலோ என் தவத்தை இழக்க வேண்டியிருக்கும். ஆகவே, அக்னியில் புகுந்து என் தவ வலிமையால் அயோனிஜையாக (கர்ப்பத்தில் பிறக்காதவளாக) மீண்டும் வருவேன் என்று கூறி அக்னியில் புகுந்தாள்.  புகும் போது அடுத்த பிறவியில் உனக்கு விருப்பம் இல்லாத பெண்ணை நீ தொட்டால் உன் தலை சுக்கு நூறாகிவிடும் என்று சாபம் தந்தாள். பின்னர் மீண்டும் ஒரு தாமரை மலரிலிருந்து தோன்றினாள். அவளை மீண்டும் பிடித்த ராவணன் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து தனது மந்திரியிடம் காண்பித்தான். அவளது சாமுத்ரிகா லட்சணத்தைக் கூர்ந்து கவனித்த மந்திரி, இவள் இங்கு இருந்தால் உன் அழிவுக்குக் காரணமாவாள் என்று கூறினார். இதனால் ராவணன் அவளை கடலில் தூக்கி எறிந்தான். கரையை நோக்கி வந்த அவள் ஒரு யாகபூமியை அடைந்தாள். அங்கு ஜனக மஹாராஜன் உழும்போது பூமியிலிருந்து அவள் வெளிப்பட்டாள். உழு சாலிலிருந்து (சீதை) வெளி வந்ததால் சீதை என்ற நாமகரணத்துடன் வளர்ந்தாள். ராமனை மணம் புரிந்தாள். கிருத யுகத்தில் வேதவதியாய் இருந்து த்ரேதா யுகத்தில் சீதையாக வெளிப்பட்ட சீதையின் முற்பிறப்பு ரகசியம் பற்றிய கதையின் சுருக்கம் இது தான்....!!!.

Wednesday, 15 January 2014

அற்புத சிவ மந்திரம்

ஓம் மணிமந்த்ர சரோ சரணம்!
ஓம் ஐஸ்வர்ய தமோ சரணம்!
ஓம் பஞ்சாட்ச்சர தமோ சரணம்!
ஓம் ஜீவதோமணம் ஜோதியே சரணம்!
ஓம் வேதத்தின் வேந்த நாயகனே சரணம்!
ஓம்  ஓம்  ஓம்

ஓம் வீங்கார பதியே நமஹ;
ஓம் ஓங்கார பதியே நமஹ;
ஓம் ஐம்பத நாயகனே நமஹ;
ஓம் உலக வித்துக்காரகனே நமஹ;
ஓம் ஜக நாயகனே நமஹ;
ஓம் உள்ளும் புறமும் நீத்தவனே நமஹ;
ஓம் கண ரட்ச்சகனே நமஹ;
ஓம் மூலாதார வித்தகனே நமஹ;
ஓம் புண்ணியபத மூர்த்தியே நமஹ;
ஓம் ஒய்யார காரகனே நமஹ;
ஓம் ஆதியும் அந்தமும் அற்றவரே நமஹ;
ஓம் பஞ்ச பரம பக காரகனே நமஹ;
ஓம் தொய்யார மூல மூர்த்தியே நமஹ;
ஓம் கனக மூல ரட்ச்சகனே நமஹ;
ஓம் பிறைசூடிய பெருமானே நமஹ;
ஓம் ஈரேயூ மூல முதல்வனே நமஹ;
ஓம்  ஓம்  ஓம்!

ஓம் நதவதன பூத்தம்
ஓம் சந்தோ நமோ பூமதனம்
ஓம் கைங்கர்யம் போம் பூம் புவர்சுக
ஓம் நித்தோம் காருபுதம் மைதவம்
ஓம் பூரணம் புனிதம் பூமயோகம்
துத்தம் துத்தம் துத்தம்!

கல்லெறிந்த நாயனார்

திருச்சங்கமங்கை என்னும் நகரத்தில் தகவுடைய வேளாண் மரபில் உதித்தவர் சாக்கிய நாயனார். இவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார்.சிவனாரிடத்தும் அவரது அடியார்களிடத்தும் பேரன்புமிக்க இப்பெருந் தலைவர் பிறவித் துன்பத்தில் நின்றும் தம்மை விடுவித்துக் கொள்ள மனங் கொண்டார். அதற்கென நன்னெறி நூல்களைக் கற்றறிய எண்ணினார்.காஞ்சிபுரத்திலுள்ள, சாக்கியர்களைக் கண்டு தன் எண்ணத்தைச் செயல்படுத்த முனைந்தார். அடிகளார் காஞ்சிபுரத்திலுள்ள சாக்கியர்களுடன் பழகினார். நூல்கள் பல ஆராய்ந்தார். ஆனால் நாயனாரால் நல்ல வகையான நெறியைக் காண முடியவில்லை. அதனால் அடிகளார் மேலும் பற்பல சமய நூல்களைக் கற்கலானார். இறுதியாக சைவ சமய நூல்களையும் கற்றார். அதன் பிறகு அடிகளார் பிறவிப் பெருங்கடலைக் கடக்க சிவநெறியே  சாலச் சிறந்த வழி என்ற ஒப்பற்ற உண்மையைக் கற்றுத் தெரிந்துகொண்டார்! அதனால் அவர் உள்ளத் தெளிவு பெற்றார். மன்னிய சீர்ச் சங்கரன் தாள்தனைப் பணிந்து தூய சிவத்தைச் சித்தத்திலிருத்தி சிந்தை குளிர்ந்தார். சாக்கியர் கோலத்திலே இருந்தமையால் தம்மைப் பிறர் அறியா வண்ணம் சிவநாமத்தை அகத்திலேயே எண்ணி ஒழுகிய சாக்கிய நாயனார் பிறர் அறியாத வண்ணம் சிவலிங்க பூசையும் நடத்தி வந்தார். தினமும் சிவலிங்க தரிசன வழிபாட்டிற்குப் பிறகு தான் உண்பது என்ற உயர்ந்த பழக்கத்தையும் மேற்கொண்டிருந்தார். ஒருநாள் நாயனார் பரந்த நிலவெளி வழியாகச் சென்று கொண்டிருக்கும்பொழுது சிவலிங்க உருவம் ஒன்று வழிபாடு எதுவும் இன்றிக் கிடப்பதைக் கண்டு உள்ளமும் உடலும் உருகினார். இத்திருத்தொண்டர் சிவலிங்கத்தைத் தூய நீராட்டி, நறுமலர் இட்டு, பூசித்து மகிழத் திருவுள்ளம் கொண்டார். ஆனால் அந்த இடத்தில் நீரேது? மலரேது? நல்ல மனம் மட்டும்தானே இருந்தது! சாக்கிய நாயனார் அன்பின் பெருக்கால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடியே சிவலிங்கத்தின் மீது போட்டார். அன்பினால் எதற்கும் கட்டுண்ட இறைவன், சாக்கிய நாயனார் எறிந்ததை அன்புக் குழவியின் தளிர்க்கரம் பற்றித் தழுவுவது போன்ற இன்பப் பெருக்காக எண்ணினார்.

இல்லாவிடில் சாக்கிய நாயனார் எறிந்த கல் கயிலையில் தேவியுடன் கொலு வீற்றிருக்கும் எம்பெருமானின் திருவடித் தாள்களில் பொன் மலரென விழுமா என்ன? சாக்கிய நாயனாரின் அன்பு உள்ளத்தைக் கண்டு அரனார் ஆனந்தம் கொண்டு சாக்கிய நாயனாருக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார். சாக்கிய நாயனார், அன்று முழுவதும் சிவலிங்க தரிசனத்தை எண்ணி எண்ணி எல்லையில்லா மகிழ்வு பூண்டார். மறுநாளும் சிவலிங்க வழிபாட்டிற்காக அவ்விடத்தை வந்து அடைந்தார்! சிவலிங்கத்தைக் கண்டு, உவகை பூண்டார். அன்பினால் கல்லெறிந்து வழிபட்ட செயலை எண்ணினார். தமக்கு இத்தகைய மனப் பக்குவத்தைத் தந்தருளியது எம்பெருமானின் திருவருட் செயலே என்று உணர்ந்தார். சாக்கியர் வேடத்தில் இருக்கும் நான் மலரால் சிவனாரை வழிபடுவதைப் பிறர் காணில் ஏசுவர். ஆனால், கல்லால் எறிவதை எவராகிலும் காண்கின், வெறுப்பின் மிகுதியால்தான் இவ்வாறு செய்கிறார் என்று எண்ணுவர். இதுவும் அரனாரின் அருள் மொழியே அன்றி, வேறொன்றுமில்லை என்று தமக்குள் எண்ணிப் பெருமிதம் கொண்டார். ஈசனைக் கல்லெறிந்து வழிபட்டு தமது இல்லத்திற்குச் சென்று  உண்ணலானார். இவ்வாறு சிவலிங்க வழிபாட்டைத் தவறாமல் தினந்தோறும் நடத்தி வந்தார்.ஒருநாள் சாக்கிய நாயனார் அரனார் மீது கொண்டுள்ள பக்திப் பெருக்கால் சிவலிங்க வழிபாட்டைச் சற்று மறந்த நிலையில் திருவமுது செய்ய அமர்ந்து விட்டார். சட்டென்று எம்பெருமான் நினைவு கொண்ட சாக்கிய நாயனார் உள்ளம் பதறிப் போனார். எம்பெருமானே! இதென்ன சோதனை! எவ்வளவு தவறான செயலைப் புரிந்துவிட்டேன்! அண்ணலே ஏழையின் பிழை பொறுத்தருள்வீரே! என்று புலம்பி உள்ளம் உருகினார். எழுந்தோடினார்! பரந்த நிலவெளியை அடைந்து சிவலிங்கப் பெருமான் மீது அன்பு மேலிட கல் ஒன்றை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி எறிந்தார். அப்பொழுது சாக்கிய நாயனாரின் அன்பிற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது எழுந்தருளினார். சாக்கிய நாயனார் கரம் குவித்து நிலந்தனில் வீழ்ந்து பணிந்து, எம்பெருமானை வணங்கினார். இறைவன் சாக்கிய நாயனாருக்குப் பிறவாப் பேரின்பத்தைக் கொடுத்தருளினார்.

Wednesday, 8 January 2014

கண்ணப்ப நாயனார்

பொத்தப்பி என்னும் நாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் நாகன்என்பவன் வேடர்குலத் தலைவனாக இருந்து மக்களைக் காத்து வருபவன்.தத்தை, அவன் மனைவியாவாள். நீண்ட காலமாகப் பிள்ளைப் பேறில்லாமல் இருக்கவே, முருகனை வேண்டி விழா எடுத்தனர். அவர்களின் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட முருகன் அருள் புரிந்தான். அவர்களுக்கு அழகான வலிமை மிக்க ஆண்குழந்தை பிறந்தது. நாகன் அக்குழந்தையைத் தன் கைகளால் தூக்கும்போது திண் என்று இருந்தமையால் திண்ணன் என்று பெயரிட்டான். திண்ணன் வளர்ந்து குல மரபிற்கேற்ப வில், அம்பு, ஈட்டி, வாள் முதலான போர்ப் பயிற்சிகளைக் கற்றுச் சிறப்படைந்தான். நாகன் முதுமை காரணமாகத் தன் பதவியினைத் தன் மகனாகிய திண்ணனிடம் தந்து நாடாளும்படி பட்டம் சூட்டினான். இதனைக் கண்டு, தேவராட்டியும் வந்து, நலம் சிறக்க என வாழ்த்திச் சென்றாள்.
ஒரு நாள் திண்ணன் நாணன், காடன் ஆகிய நண்பர்களோடு வேட்டையாடச் சென்றார். வேட்டைக்காக விரித்த வலைகளை அறுத்துக்கொண்டு ஒரு பன்றி மட்டும் ஓடியது. விடாது துரத்திச் சென்று, புதருள் மறைந்த அந்தப்பன்றியைத் திண்ணன் தம் குறுவாளால் வெட்டி வீழ்த்தினார். இதனைக் கண்ட நண்பர்கள் வியந்து, திண்ணனின் வலிமையைப் பாராட்டினார்கள். அருகே ஓடும் பொன்முகலி ஆற்றையும் வானாளாவ நிற்கும் காளத்தி மலையையும் கண்டு வியந்தார் திண்ணன். இதனைக் கண்ணுற்ற நாணன். இம் மலையின் மீது குடுமித் தேவர் இருக்கிறார். அவரைக் கும்பிடலாம் வா என்றான். மலை ஏறும்போது திண்ணனுக்கு மட்டும் புதுவிதமான இன்பமும் உணர்வும் ஏற்பட்டன. குடுமித் தேவருக்கு, சிவ கோசரியார் என்பவர் ஆகம விதிமுறைப்படி பூசை செய்வதனை நாணன் மூலம் அறிந்தார். மலையேறிய திண்ணன், குடுமித் தேவரைக் கண்டவுடன் அவரை வணங்கியும், கட்டித் தழுவியும் ஆடினார்; பாடினார். நண்பன் காடன் ஆற்றங்கரையில் தீயில் இட்டுப் பக்குவப் படுத்திய இறைச்சியைத் தன்னுடைய ஒரு கையில் எடுத்துக் கொண்டார், மறு கையில் வில் இருந்ததால் வாய் நிறைய ஆற்று நீரையும், அருகில் இருந்த மரத்தின் மலர்களைத் தலையில் செருகியும் கொண்டு வந்தார். குடுமித் தேவருக்குத் திருமஞ்சனமாகத் தன் வாய் நீரையும், அமுதமாகப் பன்றி இறைச்சியினையும் தலையில் சூடிய மலரை வழிபாட்டு மலராகவும் இட்டு மகிழ்ந்தார் திண்ணனார். பின் இரவு முழுவதும் வில்லேந்திக் காவல் புரிந்தார். காலையில் குடுமித் தேவருக்குத் திருவமுது தேடி வரப் புறப்பட்டார்.
வழக்கம் போல, பூசை புரிய வந்த சிவ கோசரியார் இறைவன் மீதிருந்த இறைச்சி முதலானவற்றைக் கண்டு வருந்தினார், புலம்பினார். பின் அவற்றை நீக்கித் தூய்மை செய்து பூசனை புரிந்து சென்றார். அடுத்து, திண்ணனாரும் வந்து இறைச்சி முதலானவற்றை வைத்து வழிபட்டார். மறுநாளும் இறைச்சி முதலானவை இருப்பது கண்டு வருந்திச் சிவ கோசரியார் இறைவனிடம் முறையிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினார். அவரது கனவில் சிவபிரான் தோன்றித் திண்ணனாரின் அன்பு வழிபாட்டை நாளை மரத்தின் மறைவில் நின்று பார்ப்பாயாக என்று கூறி மறைந்தருளினார்.
ஆறாம் நாள் திருக்காளத்தி நாதர் திண்ணனாரின் அன்பின் பெருமையைக் காட்ட, வலக் கண்ணில் இருந்து உதிரம் பெருகும்படிச் செய்தார். அதனைக் கண்ட திண்ணனார், செய்வதறியாமல் திகைத்தார். பின் தம் கைகளால் துடைத்தாலும் பச்சிலை இட்டாலும் நிற்கவில்லையே என வருந்தி நின்றபோது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது. உடனே தம் வலக்கண்ணை அம்பினால் அகழ்ந்து எடுத்து அப்பினார். உதிரம் நின்றுவிட்டது. இதைக் கண்டு மகிழ்ந்து ஆடினார். சிவபிரான் இடக்கண்ணிலும் உதிரம் பெருகும்படிச் செய்தார்.
தம் இடக்கண்ணையும் பெயர்த்து எடுத்து அப்பினால் உதிரம் நின்றுவிடும் என்று உணர்ந்தார். தம் மறு கண்ணையும் பெயர்த்துவிட்டால் இறைவனின் இடக்கண்ணைச் சரியாகக் கண்டறிய முடியாது என்பதால், அடையாளத்துக்காகத் தம் காலின் பெருவிரலை இறைவனின் உதிரம் பெருக்கும் கண் மீது ஊன்றிக் கொண்டார். அம்பினால் தம் இடக்கண்ணைப் பெயர்க்கத் தொடங்கினார். உடனே காளத்தி நாதர் நில்லு கண்ணப்ப என்று மூன்று முறை கூறித் திண்ணனாரைத் தடுத்தருளினார்.
இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவன் அருளில் மூழ்கித் திளைத்தார். அன்று முதல் இறைவனுக்கே தம் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.அருந்தவத்தோர்க்கும் கிட்டாத பரம்பொருளாகிய எம்பெருமான் திருவாய் மலர்ந்து, ஒப்புயர்வற்ற கண்ணப்பா ! நீ எமது வலப்பக்கத்திலே எப்பொழுதும் நிற்பாயாக  ! என்று திருவருள் புரிந்தார்.
. கண்ணப்பர் பரமனுக்குக் கண்கொடுத்து பக்திக்குக் கண்ணாக விளங்கினார்.

கலிக்கம்ப நாயனார்

     சீரும் சிறப்புமிக்கப் பல்வளம் செறிந்த பெண்ணாகடத் தலத்தில் வணிகர் குலத்திலே தோன்றினார் கலிக்கம்பர். சிவனடிப் பற்றேயன்றி வேறு எப்பற்றும் அற்ற இச்சிவனடியார் அடியார்களை உபசரித்து பாதபூசை செய்து அறுசுவை உணவளித்து பொன்னும் பொருளும் வேணவும் கொடுத்து அளவற்ற சேவை செய்து அகமகிழ்ந்தார். திருசடையுடைய விடையவர் திருவடியை இரவும் பகலும் இடையறாது கருத்தில் கொண்டு வாழ்ந்த இச்சிவனடியார், அந்நகரிலுள்ள தூங்கானைமாடம் என்னும் சிவக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் கங்காதரனை மறவாத சிந்தையுடையவராய் வாழ்ந்து வந்தார்.வழக்கம்போல் சிவனடியார் ஒருவர் வந்தார். நாயனார் அச்சிவனடியாரைக் கோலமிட்ட உயர்ந்த பீடத்தில் எழுந்தருளச் செய்து பாதபூசையைத் தொடங்கினார். அவரது மனைவியார் மனையைச் சுத்தமாக விளக்கி அறுசுவை உணவுகளைச் சமைத்துக் கரகத்தில் தூய நீருடன் கணவனருகே வந்தார். அச்சிவனடியாரைப் பார்த்ததும் அம்மையாருக்குச் சற்று அருவருப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் அச்சிவத்தொண்டர் முன்பு நாயனாரிடத்தில் வேலை பார்த்தவர். அதனால் அவர் மீது சற்று வெறுப்பு கொண்டு தண்ணீர் வார்க்கத் தயங்கி நின்றாள். மனைவியின் தயக்க நிலை கண்டு நாயனார் சினங்கொண்டார். தமது மனைவி தயங்குவதின் காரணத்தைப் புரிந்து கொண்டார். சிவக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனடியாரது திருச்சேவடிகளை வழிபட கரக நீரைச் சொரிந்து உபசரிக்கத் தவறிய மனைவியாரின் செயலைக் கண்டு உள்ளம் பதைபதைத்துப் போனார் நாயனார். விரைந்து சென்று வாள் எடுத்து வந்தார். மனைவியாரது கையிலிருந்த கரத்தைப் பற்றி இழுத்து அம்மையாரது கரத்தை துண்டித்தார் சிவனடியார். கலிக்கம்பரின் செயலைக் கண்டு துணுக்குற்றார் அடியார்.
கலிக்கம்பரின் மனைவி கரத்திலிருந்து ரத்தம் ஆறாய்ப் பெருக, சிவனை நினைத்த நிலையில் மயக்கமுற்றாள். அந்த அறையிலே பேரொளிப் பிரகாசம் சிவனடியார்களிடையே எவ்வித வேறுபாடும் கருதாது சிவத்தொண்டு புரிந்து வரும் நாயனாரின் இத்தகைய திருத்தொண்டின் மகிமையை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி இத்திருவிளையாடல் புரிந்த எம்பெருமான் விடை மீது எழுந்தருளினார். சிவபெருமான் அருளினால் அவரது மனைவி மயக்கம் நீங்கி முன்போல் கரத்தைப் பெற்று எழுந்தாள். அடியவர்கள் அம்பலவாணரின் அருட் தோற்றத்தைத்  தரிசித்து நிலமதில் வீழ்ந்து பணிந்தார்கள். எம்பெருமான் அன்பர்களுக்கு அருள்புரிந்து அந்தர்த்தியாமியானார். நாயனார் மனைவியோடு உலகில் நெடுநாள் வாழ்ந்து இனிய திருத்தொண்டுகள் பல புரிந்து இறுதியில் விடையவர் திருவடி மலரினைச் சேர்ந்து பேரின்பம் பூண்டார்.

Tuesday, 7 January 2014

முத்தைத் தரு பாடலும் பத உரையும்

முத்தைத்தரு பத்தித் திருநகை
                அத்திக்கிறை சத்திச் சரவண
                 முத்திக்கொரு வித்துக் குருபர                  எனவோதும்
  முக்கட்பர மற்குச் சுருதியின்
                முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும்                  அடிபேணப்
 பத்துத்தலை தத்தக் கணைதொடு
 ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில்                  இரவாகப்
 பத்தற்கிர தத்தைக் கடவிய
                 பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
                பட்சத்தொடு ரட்சித் தருள்வது                   மொருநாளே
  தித்தித்தெய ஒத்தப் பரிபுர
 நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
                திக்கொட்கந டிக்கக் கழுகொடு                  கழுதாட
 திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
 சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக                             எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
 குக்குக்குகு குக்குக் குகுகுகு                     
                குத்திப்புதை புக்குப் பிடியென                    முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
 வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல                                       பெருமாளே.
பதம் பிரித்தல்
முத்தை தரு பத்தி திரு நகை
அத்திக்கு இறை சத்தி சரவண
முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும்

முக்கண் பரமற்கு சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண

பத்து தலை தத்த கணை தொடு
ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு
பட்ட பகல் வட்ட திகிரியில் இரவாக

பத்தற்கு இரதத்தை கடவிய
பச்சை புயல் மெச்ச தகு பொருள்
பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே ?

தித்தித்தெய ஒத்த பரிபுர
நிர்த்த பதம் வைத்து பயிரவி
திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட

திக்கு பரி அட்ட பயிரவர்
தொக்கு தொகு தொக்கு தொகுதொகு
சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத

கொத்து பறை கொட்ட களம் மிசை
குக்கு குகு குக்கு குகுகுகு
குத்தி புதை புக்கு பிடி என முது கூகை

கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை
வெட்டி பலி இட்டு குலகிரி
குத்துப்பட ஒத்து பொர (ல்) பெருமாளே.
பத உரை
முத்தை             =   முத்துப் போன்ற முத்திச் செல்வத்தை.
தரு                 =   அளிக்கும்.
 பத்தித் திரு நகை = வரிசையாய் விளங்கும் பற்களை உடைய.
அத்திக்கு                  = யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனைக்கு.
இறை                         = இறைவனே.
சத்தி             = சத்தி வேல் (ஏந்திய).
சரவண           = சரவணபவனே.
முத்திக்கு                  = வீட்டுப் பேற்றுக்கு.
ஒரு வித்து               = ஒரு வித்தே.
குருபர           = குரு மூர்த்தியே.
 என ஓதும்                = என்று ஓதுகின்ற.

முக்கண் பரமற்கு  = மூன்று கண்களை உடைய சிவபெருமானுக்கு.
சுருதியின் முற்பட்டது = வேதத்தில் முற்பட்டு நிற்கும் பிரணவத்தை.
கற்பித்து                              = கற்பித்து.
இருவரும்            = பிரமன்திருமால் ஆகிய இருவரும்.
முப்பத்து மூ வர்க்கத்து = முப்பது மூன்று வகையான
அமரரும்             = தேவர்களும்.
அடி பேண            =  (உனது)திருவடியை விரும்ப 
                                                       (அவுணருடன் போர் செய்த பெருமாளே)
பத்துத் தலை தத்த     = (இராவணனுடையபத்து தலைகளும் சிதறும்படி.
கணை தொ(ட்)டு             = அம்பைச் செலுத்தியும்.
ஒற்றைக் கிரி மத்தை  = ஒப்பற்ற மந்தரம் என்னும் மலையை மத்தாக நட்டு.
பொருது                              = (கடலைக்கடைந்தும்.
ஒரு பட்டப்பகல்       = ஒரு பட்டப் பகலை.
வட்ட                வட்ட வடிவமாக உள்ள.
திகிரியில்                = சக்கரத்தினால்.                   
இரவாக                               = இரவாகச் செய்தும்.
பத்தற்கு இரதத்தைக் கடவிய = பத்தனாகிய அருச்சுனனுடைய தேரைப் 
                                  பாகனாகஇருந்த நடத்திய.
 பச்சைப் புயல்         பச்சை மேகம் போல் நிறமுடைய திருமால்.
 மெச்சத் தகு பொருள்      = மெச்சத் தகுந்த பொருளே.
பட்சத்தொடு           = (என் மீதுஅன்பு வைத்து.
ரட்சித்து அருள்வதும்   (என்னைக்காத்தருளும்.
அருள்வதும்ஒரு நாளே = ஒரு நல்ல நாளும் உண்டாகுமா?
தித்தித்தெய ஒத்து       = தித்தித்தெய என்னும் தாளத்துக்கு ஒத்த வகையில்.
பரிபுரம்                 = சிலம்பு (அணிந்த).
நிர்த்தப் பதம் வைத்து         = நடனப் பதத்தை வைத்து.
பயிரவி                 காளி.                
திக்கு                                           = திக்குகளில்.
ஒட்க நடிக்க                             = சுழன்று நடிக்கவும்.     
கழுகொடு                                 = கழுகுகளுடன்.
கழுது                   பேய்கள்.                                             
ஆட                                              = ஆடவும்.
திக்குப் பரி                                 = திக்குகளைக் காக்கும்
அட்டப் பயிரவர்                      = எட்டு பயிரவர்கள்.
தொக்கு.....தொகு                     = தொக்குத் தொகு என வரும்.
சித்ர                                              = அழகிய.                        
பவுரிக்கு                                     = மண்டலக் கூத்தை.  
த்ரிகடக என ஓத          = த்ரிகடக என்று ஓதவும்.
கொத்துப் பறை                        = கூட்டமான பறைகள்.
கொட்ட                                        = முழங்கவும்.                             
 களம் மிசை                               = போர்க் களத்தில்.
குக்குக்குகு...குத்திப் புதை புக்குப் பிடி= இவ்வாறு ஒலி செய்து.
முது கூகை                                = கிழக் கோட்டான்கள்.
கொட்புற்று எழ                        = வட்டம் இட்டு எழவும்.
நட்பு அற்ற அவுணரை     = பகைவர்களாகிய அசுரர்களை.
வெட்டிப் பலி இட்டு               = வெட்டிப் பலி இட்டு.
குலகிரி                                        = குலகிரியாகிய கிரௌஞ்ச மலை.
 குத்துப்பட ஒத்து          = குத்துப்படத் தாக்கி.
பொர (ல்)                             = சண்டை செய்ய வல்ல.
பெருமாளே                                 = பெருமாளே.
சுருக்க உரை
          வீட்டுப்பேற்றை அளிக்கும்வரிசையாகப் பற்களை உடையவளும்
யானையால் வளர்க்கப்பட்டவளுமாகிய  தேவசேனைக்கு இறைவனே,
சத்தி வேலைத் தாங்கிய சரவணனேமுத்திக்கு ஒரு வித்தேஞான
குருவே என்று துதித்து நின்றமுக்கண் பரமனாகிய சிவ
பெருமானுக்குப் பிரணவப் பொருளைக் கற்பித்தவரேபிரமன்,
திருமால் ஆகிய இருவரும்முப்பத்து மூன்று தேவர்களும் உனது
திருவடியைப் போற்றி விரும்ப அவுணருடன் போர் செய்தவரே.

              இராவணனுடைய பத்துத் தலைகளைச் சிதறும்படி அம்பைச்
செலுத்தியவரும்மந்தர மலையை மத்தாகநட்டு கடலைக் கடைந்த வரும்,  
பகலை தனது சக்கரத்தால் இரவாக்கியவரும், அருச்சனனுடைய தேரைச்ஓட்டியவரும் பச்சை நிறமுடையவரும் ஆகிய   திருமால் மெச்சிய மருகனேஎன்மீது அன்பு   வைத்து என்னைக் காத்து  
அருளுவதும் ஒரு நாள் ஆகுமோ?தாளத்துக்கு ஒத்தவாறு பதத்தை வைத்து, பயிரவி சுழன்று நடிக்கவும் கழுகுகள்,பேய்கள் ஆடவும்எட்டுத் திக்குப்   பயிரவர்கள் மண்டலக் கூத்து ஆடவும்பறைகள்முழங்க போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்ஓலமிடவும்அசுரர்களை வெட்டி,கிரௌஞ்ச மலை   பொடி ஆகும்படி போர் செய்த பெருமாளேஎன்னைக்காத்தருளுவதும்   ஒருநாள் உண்டாகுமோ?